ராஜ ராஜேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு

அசுரர்கள் சும்பன், நிசும்பன் ஆகியோர் தேவர்களுக்கு இன்னல்கள் உண்டாக்கி, அவர்களை வென்றனர். இவர்களின் அழிவு நேரத்தில் ஆதிபராசக்தியிலிருந்து கவுசிகியும், காளிகா எனப்படும் காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு முப்பெரும் தேவியின் வடிவங்களில் அஷ்ட மாதர்கள், அஷ்டராத்திரிகளாக தோன்றினர்.

பிராம்மணி (பிரம்ம சக்தி) அன்ன வாகனத்தில், அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் வந்தாள்.

வைஷ்ணவி (விஷ்ணு சக்தி) கருட வாகனத்தில், சங்கு, சக்கரம், கதை, தாமரையுடன் தோன்றினாள்.

மகேஸ்வரி (சிவ சக்தி) ரிஷப வாகனத்தில், திருசூலம், வரமுத்திரையுடன் வந்தாள்.

கவுமாரி (கார்த்திகேய சக்தி) மயூர வாகனத்தில், வேலாயுதத்துடன் தோன்றினாள்.

மாகேந்திரி (இந்திர சக்தி) ஐராவதத்தில், வஜ்ராயுதத்துடன் வந்தாள்.

வாராஹி (வராஹ சக்தி) எருமை வாகனத்தில், கலப்பையுடன் தோன்றினாள்.

சாமுண்டா (பைரவரின் சக்தி) எம வாகனத்தில், கத்தியுடன் தோன்றினாள்.

நரசிம்ஹி (நரசிம்ம சக்தி) கமல பீடத்தில், கூரிய நகம் ஆயுதமாக கொண்டு வந்தாள்.

இவர்கள் அனைவரும் காளிகா எனப்படும் சண்டிகா தேவியுடன் இணைந்து ஒன்பது ராத்திரிகளாகிய நவராத்திரிகளாக விளங்கினர்.

இந்த நவராத்திரியில் தேவியர் சும்பன் – நிசும்பனை அழித்து, அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுதலை செய்தனர். இதனால் தேவர்கள் கவுசிகி அம்பிகையையும், நவராத்திரி தேவியரையும் போற்றி துதித்தனர்.

மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படும் ராஜ ராஜேஸ்வரி திருக்கோலம் வணங்கப்படுவதால், நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெருகும்.

👉 3 வயது சிறுமியை கவுமாரியாக நினைத்து பூஜிக்க வேண்டும்.

👉 நைவேத்தியம்: புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.

👉 கீர்த்தனை: கல்யாணி, பெஹாக் ராகங்களில் பாடல்கள் பாட வேண்டும்.

👉 பூஜை மலர்கள்: முல்லை, துளசி, மஞ்சள் கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி.

Facebook Comments Box