மகாலட்சுமி அலங்கார திருக்கோலம் | நவராத்திரி பூஜை

புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில், கொலு வைக்கும் சம்பிரதாயம் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுரதா என்ற மன்னன், தனது சதுரங்கப் போரில் எதிரிகளை வெல்ல என்ன வழிகள் உள்ளன என்று குரு சுமதாவிடம் ஆலோசனை கேட்கிறார்.

அதற்கு குருநாதர் உரிய அறிவுரைகளை வழங்குகிறார். அதன் படி, மன்னன் சுரதா புனிதமான ஆற்று மணலைக் கொண்டு காளி வடிவத்தை உருவாக்குகிறார். அதை அலங்கரித்து, பக்தி நிறைந்த நோன்பு இருந்து வழிபடுகிறார்.

அப்போது தேவியான அம்பிகை அவரது வேண்டுகோளை நிறைவேற்றி, அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்து, புதிய யுகத்தை ஏற்படுத்துகிறார். மகிழ்ச்சியடைந்த மன்னன் நன்றி செலுத்த, அம்பிகையும், “ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மைகளால் என்னை பூஜித்தால் உனக்கு எல்லா வளங்களையும் தருவேன்” என்று அருள் வழங்குகிறார். இதுவே நவராத்திரியில் கொலு வைத்து தேவியை வழிபடும் வழக்காக மாறியது.

அந்தக் காலத்தில் களிமண், மரம், மரப்பாச்சி போன்ற பொம்மைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. இன்று காலத்தோடு மாறி பீங்கான், கண்ணாடி பொம்மைகள் கொலுவில் வைக்கப்படுகின்றன. சிம்மாசனத்தில் வெற்றிக் கொலத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியை ஆராதிப்பதால் சூரிய தோஷம் நீங்கி, அமைதியான வாழ்க்கை கிடைக்கும்.

மேலும், 5 வயது சிறுமியை ரோகிணி வேடத்தில் நவகிரக நாயகியாக நினைத்து, ஸ்ரீஸ்துதி சொல்லி பூஜை செய்ய வேண்டும். கஸ்தூரி, மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை அணிவித்து, பைரவி, சௌராஷ்டிரம் ராகங்களில் பாடல்கள் பாடி, செந்தாமரை, ரோஜா, ஜாதி மலர்களால் பூஜை செய்ய வேண்டும்.

தயிர் சாதம், உளுந்து வடை, அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், பட்டாணி சுண்டல் போன்றவற்றில் ஏதேனும் நைவேத்யமாக சமர்ப்பிக்க வேண்டும்.

Facebook Comments Box