ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.25 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில், 8 நாட்களில் பக்தர்கள் ரூ.25 கோடியை காணிக்கையாக வழங்கியுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது: பிரம்மோற்சவ விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. 8 நாட்களில் ரூ.5.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர், 26 லட்சம் மக்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது, 2.42 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர், மற்றும் 28 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
போக்குவரத்து மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள்:
- ஆந்திர அரசு பேருந்துகள் மூலம் 4.4 லட்சம் பக்தர்கள் திருப்பதி-திருமலை இடையே பயணித்தனர்.
- 28 மாநிலங்கள் மற்றும் 298 குழுக்களில் மொத்த 6,976 கலைஞர்கள் மாடவீதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
- கருட சேவைக்கு மட்டும் 780 கலைஞர்கள் 37 குழுக்களில் கலந்துகொண்டனர்.
- விழாவில் 65 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டன; 36 எல்இடி தொலைக்காட்சிகள் வாகன சேவைகளுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகள்:
- 3,500 வாரி சேவகர்கள், 5,000 போலீஸார், 1,800 தேவஸ்தான கண்காணிப்பு ஊழியர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
- 50 மருத்துவர்கள், 60 பாராமெடிக்கல் ஊழியர்கள், 14 ஆம்புலன்ஸ்கள் மருத்துவ சேவைக்காக தயார் நிலையில் இருந்தனர்.
- கருட சேவையன்று 16 உணவு வகைகள் மாடவீதிகளில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
- 2,800 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றினர்.
பி.ஆர். நாயுடு இதையடுத்து, அனைத்து தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறை, ஊடகத்தினருக்கு நன்றியை தெரிவித்தார்.