WhatsApp Channel
ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் மற்றும் இக்ரம் அலிகில் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் குர்பாஸ் அதிரடி காட்டினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
அணியின் ஸ்கோர் 114 ஆக உயர, இப்ராகிம் ஜத்ரன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் களம் இறங்கிய ரஹ்மத் ஷா 3 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடி காட்டிய குர்பாஸ் 57 பந்துகளில் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஹஸ்மத்துல்லா ஷாஹிடி 14 ரன்களிலும், அடுத்து களம் இறங்கிய ஒமர்சாய் 19 ரன்களிலும், நபி 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு ரஷித் கானும், இக்ரம் அலிகிலும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர்.
அதிரடி காட்டிய ரஷித் கான் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் முஜீப் களம் இறங்கினார். அதிரடி காட்டிய இக்ராம் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.
Discussion about this post