ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்று வரும் ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டி நடந்தது.
இதில் இந்தியாவின் சுருச்சி சிங் 241.9 புள்ளிகள் எடுத்துக் கொண்டு முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். பிரான்ஸைச் சேர்ந்த காமில் ஜெட்ரெஜெவ்ஸ்கி 241.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைவும், சீனாவின் குயன்ஸுன் யாவோ 221.7 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்