மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் மாநில அளவிலான 21-வது ஆண்டு மின்னொளி கூடைப்பந்து போட்டி, எதிர்வரும் ஜூன் 21 முதல் 28 வரை, சென்னை எழும்பூரில் உள்ள வெங்கு தெரு மாநகராட்சி திடலில் நடைபெற உள்ளது.
இந்த போட்டித் தொடரில், ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமானவரி துறை, ஜெய்ப்பியார் இன்ஸ்டிடியூட், தமிழ்நாடு காவல்துறை, லயோலா கல்லூரி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மற்றும் மேயர் ராதாகிருஷ்ணன் கிளப் உட்பட மொத்தம் 34 அணிகள் பங்கேற்கின்றன.
மகளிர் பிரிவில் ரைசிங் ஸ்டார், ஜெய்ப்பியார் இன்ஸ்டிடியூட், எத்திராஜ் கல்லூரி, தமிழக காவல்துறை, ஐசிஎஃப் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன.
இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.
இந்த தகவலை மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து சங்கத்தின் திரு. கே. கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.!