டிஎன்பிஎல் டி20: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது தொடர் வெற்றி

0

டிஎன்பிஎல் டி20: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது தொடர் வெற்றி

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் திருநெல்வேலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி கிராண்டு சோழாஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி, 5 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. கேப்டன் பாபா இந்திரஜித் 40 பந்துகளில் 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 63 ரன்கள் விளாசினார். விஜய் சங்கர் 46 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் உடன் 59 ரன்கள் சேர்த்தார்.

179 ரன்கள் இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய திருச்சி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சுரேஷ் குமார் 63, கவுசிக் 45, சஞ்ஜய் யாதவ் 29 ரன்கள் எடுத்தனர்.

முடிவு ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 3 பந்துகளில் 6 ரன்கள் வந்தன. ஆனால், அடுத்த 3 பந்துகளில் 2 விக்கெட்கள் இழந்து வெற்றியை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சேப்பாக் அணிக்கு இது தொடர்ச்சியான 6-வது வெற்றியாகும். தொடரில் இதுவரை தோல்வி கண்டிராத அந்த அணி, 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here