பள்ளிகள் இடையிலான வாலிபால் போட்டி துவக்கம்

சான் அகாடமியின் 7வது சென்னை மாவட்ட பள்ளிகள் இடையிலான வாலிபால் போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தொடரில், ஆண்கள் சிறுவர் பிரிவில் 27 அணிகளும், பெண்கள் சிறுமியர் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்கின்றன.

தொடக்க விழாவில், தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் ஆர். அர்ஜுன் துரை, எஸ்டிஏடி பொது மேலாளர் எல். சுஜாதா, சர்வதேச வாலிபால் வீரர் பி. சுந்தரம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் துணைத் தலைவர் தினகர், செயல் தலைவர் ஜெகதீசன், பொருளாளர் பழனியப்பன், செயலாளர் ஸ்ரீகேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறுவர் பிரிவின் லீக் ஆட்டங்களில், டான்பாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ், செயின்ட் பீட்ஸ், சேது பாஸ்கரா, பிஏகே பழனிசாமி, ஒய்எம்சிஏ கொட்டிவாக்கம், ஆலந்தூர் மான்போர்ட், முகப்பேர் வேலம்மாள் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு முன்னேறின.

Facebook Comments Box