புச்சிபாபு தொடர்: டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 567 ரன்கள் குவித்து டிக்ளேர்

சென்னை சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வரும் புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் அரைஇறுதியில், டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி, ஜம்மு & காஷ்மீருக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 567 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

2-வது நாள் முடிவில் 503/7 என இருந்த டிஎன்சிஏ அணி, நேற்று (3-வது நாள்) 203 ஓவர்களில் 9 விக்கெட்களுக்கு 567 ரன்கள் சேர்த்து இன்னிங்ஸை முடித்தது. அம்ப்ரிஷ் 83, வித்யுத் 37 ரன்கள் எடுத்தனர். ஜம்மு & காஷ்மீர் அணிக்காக அபித் முஸ்தாக் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பதில் ஆடிய ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் எடுத்தது. யாவர் ஹசன் 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அப்துல் சமத் 75 ரன்கள் குவித்தார். டிஎன்சிஏவின் வித்யுத் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

Facebook Comments Box