இந்தியா – பாக். ‘சூப்பர் 4’ ஆட்டம்: மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி பைகிராஃப்ட்..!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்துக்கு மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி பைகிராஃப்ட் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி கைகுலுக்காத விவகாரத்தில் ஆண்டி பைஃகிராப்ட் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது.
அவரை தொடரில் இருந்து நீக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தொடரில் இருந்து விலகுவோம் என மிரட்டல் விடுத்தது. ஆனால் ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. அத்துடன் பாகிஸ்தான் அணியின் கடைசி லீக் ஆட்டத்திலும் பைகிராஃப்ட்டே மேட்ச் ரெஃப்ரீயாக செயல்பட்டிருந்தார். இந்த நிலையே இன்றைய ஆட்டத்திலும் தொடரக்கூடும் என தெரிகிறது.
Facebook Comments Box