ஆசிய கோப்பை இறுதி: குல்தீப் யாதவ் தீப்தி – 146 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட்

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா இல்லாமல், அவரது இடத்தில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இலங்கைக்கு எதிராக விளையாடாத பும்ரா, ஷிவம் துபே ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் – பஹர் ஸமான் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் கூட்டணியை அமைத்தனர். ஃபர்ஹான் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த போட்டியில் சர்ச்சையான கொண்டாட்டம் செய்திருந்த அவர், இந்த முறை பேட்டை மட்டும் உயர்த்தி கொண்டாடினார்.

வருண் சக்கரவர்த்தி வீசிய 10-வது ஓவரில் ஃபர்ஹான் 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் விரைவில் அவுட்டானார்கள் — சயீம் அயூப் 14, முகமது ஹாரிஸ் 0, பஹர் ஸமான் 46, ஹுசைன் தலாத் 1, கேப்டன் சல்மான் அலி ஆகா 8, ஷாஹீன் ஷா அப்ரிடி 0, பஹீம் அஷ்ரப் 0, ஹாரிஸ் ரவூஃப் 6, முகமது நவாஸ் 6 ரன்களில் முறையே வெளியேறினர்.

இதன் விளைவாக, 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி முழுவதுமாக ஆட்டமிழந்தது. இந்திய அணிக்காக குல்தீப் யாதவ் 4 விக்கெட், வருண் சக்கரவர்த்தி 2, அக்சர் 2, பும்ரா 2 விக்கெட்டுகள் பெற்றனர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற, இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box