2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் கலந்துரையாடினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாரீஸ் செல்லும் எங்கள் குழுவினருடன் கலந்துரையாடினேன்.
நமது விளையாட்டு வீரர்கள் தங்களால் இயன்றதைச் செய்து இந்தியாவைப் பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களின் வாழ்க்கைப் பயணமும் வெற்றியும் 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது என்று பிரதமர் கூறினார்.