சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்.

0

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நாளை முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.இதையொட்டி, தீவுத்திடலை முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வு “சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்” நாளை முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை சென்னை தீவுத் திடலைச் சுற்றி நடைபெறுகிறது. இந்நிகழ்வு இன்று முதல் செப்டெம்பர் 1 ஆம் திகதி வரை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தெற்கிலிருந்து வரும் வாகனங்கள்: காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தொழிலாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாகச் செல்லலாம்.

மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயின்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

சிவானந்தசாலை மற்றும் கொடி மர வீதி முற்றாக மூடப்படும்.

வடக்கிலிருந்து வரும் வாகனங்கள்: > காமராஜர் சாலையில் இருந்து சாந்தோம் நோக்கி வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் இல்லை.

சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவஞ்சல் சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரையிலான ஒரு வழிப்பாதை தற்காலிகமாக இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

முத்துசுவாமி சந்திப்பில் இருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக பல்லவன் சாலை, ஈ.வி.ஆர்.சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக அவர்கள் இலக்கை அடையலாம்.

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்: தீவுத்திடலை சுற்றியுள்ள முக்கிய சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ வி ஆர் சாலை, ஆர் ஏ மூன்றம் சாலை, முத்துசாமி முனை மற்றும் பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்கள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here