தமிழக சட்டசபையில் இன்று தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் மாளிகை தகவல்….

0

தமிழக சட்டசபையில் இன்று தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக சட்டப் பேரவையில் இன்று மீண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதிப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும்.

இது அனைத்து சட்டசபைகளிலும் கவர்னர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் சட்டசபைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படுகிறது.

பேரவையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டிய ஆளுநர், தேசிய கீதத்தைப் பாடுமாறு பேரவைத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர் ஆகியோருக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது என ஆளுநர் மிகுந்த வேதனையுடன் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here