பட்டாசு தொழிற்சாலை வெடித்ததில் ஒரு பெண் உயிரிழப்பு

0

விருதுநகர் அருகே உள்ள கோவில்புலி குத்தியில் பட்டாசு தொழிற்சாலை வெடித்ததில் ஒரு பெண் உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே உள்ள கோவில்புலி குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு பலத்த சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் வந்தாலும், பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால், அரை மணி நேரம் தீயை அணைக்க முடியவில்லை.

பின்னர், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. வெடிப்பில் 10க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. ராமலட்சுமி என்ற பெண் தீக்காயங்களுடன் இறந்த நிலையில், ஒரு ஆண் உட்பட 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் போர்மேன் செல்வகுமாரை கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள தொழிற்சாலை உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், பட்டாசு விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here