WhatsApp Channel
மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் உள்ளன. இந்த நிலையில் இங்கு அதிக அளவில் காணப்படும் குடைவரைக் கோயில்களில் ஒன்றான குடைவரைக் கோயில் தற்போது பஞ்சபாண்டவ மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு முடிக்கப்படாத குடை கோவில் வகை. இதன் 3 முனை அமைப்பைப் பார்த்தால், நடுவில் கருவறையும், அதைச் சுற்றி மண்டபமும் கொண்ட பெரிய கோயிலாக பல்லவ மன்னர்களால் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டது. இதன் முகப்பில் 6 முழு தூண்களும் 2 அரை தூண்களும் உள்ளன.
இதற்குப் பின்னால், இதேபோன்ற மற்றொரு வரிசை தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்திற்கு வரும் வடமாநில சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர், மகாபாரதக் கதைகளைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பஞ்சபாண்டவ மண்டபத்தில் இருந்து ஆர்வத்துடன் வெளியேறுகின்றனர்.
இந்நிலையில் இந்த மண்டபத்தின் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலில் உள்ள துளை வழியாக மழைநீர் கசிகிறது. மழைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை கண்டும், தொல்லியல் துறையினரை சரி செய்து தருமாறும் கேட்டுக் கொள்வதை காணலாம்.
எனவே தொல்லியல் துறை நிர்வாகம் மழைநீர் கசிந்துள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post