WhatsApp Channel
பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படும் நிலையில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் பேட்ரிக் ரைமண்ட், முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்கப்பள்ளிகளில், 2004ல் நேரடியாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்பாக இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், அவர்கள் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூட தனி பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு விதிகள் உருவாக்கப்படவில்லை. முதுகலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் 19 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் தவித்து வருகின்றனர். பதவி உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கவும், விதிகளை உருவாக்கவும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. இதனை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும், மாநில முன்னுரிமை பட்டியலில் சேர்க்கவும், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
தற்போது பள்ளிக் கல்வித் துறையில் மேல்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
பட்டதாரி ஆசிரியர்களின் இந்த கோரிக்கை செயல்தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து செயல்தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி பள்ளிக் கல்வித்துறை சார்பில் நேற்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.
அதில், ‘உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை இருப்பது போல், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வருங்காலத்தில் மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ‘ தங்களின் 19 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post