WhatsApp Channel
2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு புளி, சர்க்கரை, முழு கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரூ. 1,000 பரிசுத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி, 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.1,000 ரொக்கத்துடன் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 9ம் தேதி வரை டோக்கன்கள் விநியோகிக்கப்படும். இதன் பின், 10ம் தேதி முதல், 13ம் தேதி வரை, ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பெறலாம். 13ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அட்டை மற்றும் பணமில்லாத அட்டை வைத்திருப்பவர்கள் தவிர அனைவரும் இதைப் பெறலாம்.
Discussion about this post