WhatsApp Channel
விசாகப்பட்டினத்தில் ‘மிலான் 24’ கூட்டுப் பயிற்சியில் பல்வேறு நாடுகளின் கடற்படையினர் பங்கேற்க உள்ளனர்.
இந்திய கடற்படை சார்பில், விசாகப்பட்டினத்தில், ‘மிலான் 24’ எனப்படும், 12வது கடற்படை பயிற்சி, பிப்ரவரி, 19ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, 11வது கடற்படை கூட்டுப் பயிற்சி, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம், விசாகப்பட்டினத்தில் நடந்தது.
இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சியில் பல்வேறு நாடுகளின் கடற்படையினர் பங்கேற்க உள்ளனர். இந்தப் பயிற்சியின் நோக்கம் கடல்சார் படைகளின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துதல், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கடற்படைகளுக்கிடையிலான தொழில்முறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என கூறப்படுகிறது.
Discussion about this post