WhatsApp Channel
தமிழக அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.14.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆண்டு இறுதியில், கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளில் நடைபெறும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்வி நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கேற்பை அவர்களின் பெற்றோர் முன்னிலையில் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக ஆண்டு விழா அமைந்துள்ளது.
அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பள்ளி நிர்வாகக் குழுவுடன் இணைந்து ஆண்டு விழாவை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டு விழா நடத்த ரூ.14.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும்.
Discussion about this post