WhatsApp Channel
வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்குமாறு தமிழக அமைச்சர் சேகர் பாபுவுக்கு வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
கோவையின் மேற்கு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி தென் கைலாயம் என்று போற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழுமலையானை கடந்து சிவனை தரிசிப்பது வழக்கம்.
தற்போது பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் வந்தாலும் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி முதல் மே மாதம் வரை வனத்துறையினர் மலையேற பக்தர்களை அனுமதித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post