வந்தே பாரத் ரயில்களில் முன்பதிவின்றி டிக்கெட் பெற புதிய ஏற்பாடு: தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு

வந்தே பாரத் ரயில்களில் முன்பதிவின்றி டிக்கெட் பெற புதிய ஏற்பாடு: தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு

தெற்கு ரயில்வே நிர்வாகம், வந்தே பாரத் விரைவுவந்திகள் இயக்கப்படும் முக்கிய வழித்தடங்களில் புதிய பயண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் கீழ், தற்போது முன்பதிவு இல்லாத பயணிகளும், ரயில்தொடங்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக டிக்கெட்டை நேரில் வாங்கி பயணிக்க வாய்ப்பு பெற உள்ளனர்.

இந்த புதிய நடைமுறையைப்பற்றி தெற்கு ரயில்வே தந்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“கோயம்புத்தூர் – பெங்களூரு ஆகியவற்றை உள்ளடக்கிய 8 முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில், ஜூலை 17ஆம் தேதி முதல், பயணத் தேதிக்கான முன்பதிவு செய்யாத பயணிகளும், ரயில்தொடங்கும் நேரத்திற்கு 15 நிமிடங்கள் வரை முன் நேரத்தில் டிக்கெட்டை வாங்கி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதன்மூலம், அதிகமான பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணம் செய்ய முடியும்.”

இந்த வசதி கிடைக்கும் 8 வழித்தடங்கள் பின்வருமாறு:

  1. மங்களூரு – திருவனந்தபுரம் சென்ட்ரல்
  2. திருவனந்தபுரம் சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல்
  3. சென்னை எழும்பூர் – நாகர்கோவில்
  4. நாகர்கோவில் – சென்னை எழும்பூர்
  5. கோவை – பெங்களூரு
  6. மங்களூரு – மட்கான்
  7. மதுரை – பெங்களூரு
  8. டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் – விஜயவாடா

இவையனைத்திலும் தற்போது “Walk-in” முறையில் பயணிகளுக்கு முன்பதிவின்றி டிக்கெட் வாங்கும் புதிய வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது, அவசர பயண திட்டம் உள்ளவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Facebook Comments Box