பேருந்து கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சிவசங்கர் உறுதி

பேருந்து கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சிவசங்கர் உறுதி

அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தும் திட்டமோ, யோசனையோ இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெளிவுபடுத்தினார்.

அரியலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது:

“பேருந்து கட்டணம் உயரும் என்று அடிக்கடி போலியான தகவல்கள் பரவுவது வழக்கமாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த வதந்திகளை அரசு மறுக்கி வருகிறது.

பொதுமக்கள், குறிப்பாக ஏழை மக்களின் மீது நிதிசுமை ஏற்படக்கூடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய அறிவுரையின் பேரில்தான் செயல்படுகிறோம்.

அதனால், பேருந்து கட்டண உயர்வுக்கான யாரும் யோசனை செய்ததில்லை” என அவர் கூறினார்.

அதன்பின், அதிமுகவை முழுவதுமாக கட்டுப்படுத்தி, அந்த அரசியல் இடத்தை பாஜக கைப்பற்ற விரும்புகிறது என திமுகவில் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறியதை அமைச்சர் குறிப்பிட்டார்.

திமுகவின் வாக்குகளைக் கலைத்துவிட பல்வேறு புதிய கட்சிகளை ஒவ்வொரு தேர்தலிலும் உருவாக்கி பாஜக தேர்தலுக்குள் இறக்கி வருகிறது.

இந்த முறையும் அந்த ஒரே யுக்தியை அவர்கள் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் இதை புரிந்து கொண்டு, திமுகவிற்கு வெற்றி அளிப்பார்கள்” என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், “பாஜகவுடன் இனி எந்தவித கூட்டணியும் இல்லை” என்று வெளிப்படையாகக் கூறியவர் எடப்பாடி பழனிசாமிதான், ஆனால் அமித்ஷா உடன் மேடையில் இருந்தபோது எந்த பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்தார் என்று விமர்சித்தார்.

“இனி சில நாள்களில் அவர் என்னவெல்லாம் பேசப்போகிறார் என்பது தெரியவில்லை!” என்றும் அமைச்சர் சீறினார்.

Facebook Comments Box