நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸின் சொத்துப் பதிவுகள் தொடர்பாக ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு – உயர் நீதிமன்றம் ஆணை

நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸின் சொத்துப் பதிவுகள் தொடர்பாக ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு – உயர் நீதிமன்றம் ஆணை

திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ராபர்ட் புரூஸ் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மற்றும் வழக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு சி. ராபர்ட் புரூஸ், 1,65,620 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அவருடைய வெற்றியை எதிர்த்து, பாஜகவின் வேட்பாளராக இருந்த நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கொன்றை பதிவு செய்தார். அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், மேலிடங்களில் நிலுவையிலுள்ள வழக்கு விவரங்களையும் அறிவிக்காமல் மறைத்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது சாட்சி அளித்த நயினார் நாகேந்திரன், வேட்புமனுவில் சொத்துகள் மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை மறைத்து, ராபர்ட் புரூஸ் தேர்தலில் வெற்றிபெற்றதாக விளக்கினார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் புரூஸ் தரப்பில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் தாங்கள் அதில் பங்கேற்க வேண்டியிருப்பதாகவும், பின்னர் விசாரணையில் ஆஜராக சலுகை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்று, அவர் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட சொத்து மற்றும் வழக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் தொடர்ச்சி விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Facebook Comments Box