நெல்லை: காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு

நெல்லை: காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் ஏற்பட்ட திடீர் மோதலின் போது, காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பாக்குடி பகுதியில், ரஸ்தா என்னும் இடத்தில் நேற்று இரு சமூகத்தினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும், பாப்பாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்துக்குச் சென்று அமைதியை நிலைநிறுத்த முயற்சித்தார்.

அப்போது, அங்கு இருந்த 17 வயது சிறுவன் ஆத்திரம் கொண்டு, திடீரென அரிவாளுடன் உதவி ஆய்வாளரின் மீது தாக்குதலுக்கு முயன்றுள்ளார். இது எதிர்பாராத சம்பவமாக இருந்ததால், முருகன் அருகில் இருந்த வீட்டின் கழிவறைக்குள் சென்று கதவை மூடி ஒளிந்துகொண்டார். ஆனால், அந்த சிறுவன் அரிவாளால் கதவைத் தொடர்ந்து வெட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் கதவு சேதமடைந்தது.

தொடர்ந்து, நிலைதிருத்த முடியாத சூழ்நிலையில், உதவி ஆய்வாளர் தன்னைக் காப்பாற்ற தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சிறுவனை நோக்கிச் சுட்டார். அந்த குண்டு சிறுவனின் வயிற்றுப்பகுதியைத் தாக்கியுள்ளது. காயமடைந்த சிறுவன், உடனே திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட சிறுவனை எதிர்த்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்மீது,

  • சீருடை அதிகாரியைத் தாக்க முயன்றது,
  • அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தது,
  • பெண் உறவினர்களிடம் அவமதிப்பான வார்த்தைகள் பேசியது,
  • பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டது
    எனக் கூறி மொத்தமாக 11 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக பாப்பாக்குடி பகுதியில் கடும் பரபரப்பு நிலவுகிறது. அத்துடன், போலீசார் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளனர்.

Facebook Comments Box