டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

0

 

தமிழகத்தில் ரூ.8000 கோடியில் புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்து, அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். 
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் பங்கேற்கும் விழா, விழா நடைபெறவுள்ள நேரு விளையாட்டரங்கம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் காவலர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இந்நிலையில், பிரதமர் மோடி தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுள்ளார். தனி விமானம் காலை 10.35 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறது. 
சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் அதிமுக, தேமுதிக, பாமக, தமாகா கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.  
கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பதால் தேர்தல் கூட்டணி இறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here