திமுக சார்பில் கோவையில் ‘விடியலை நோக்கி ஓராயிரம் இளைஞர்கள்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா பங்கேற்று பேசுகையில், “இன்றுள்ள கட்சிகளில் சமூக நீதியை காப்பாற்றக்கூடிய கட்சி திமுக மட்டுமே. அதிமுக இந்துத்துவாவுக்கு துணை போகும் கட்சியாகிவிட்டது. நாடாளுமன்றத்தில் முன்பு சபாநாயகர் உள்ளே நுழைந்தால், எம்.பி.க்கள் ‘வணக்கம்’ என்று கூறுவது வழக்கம். இப்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என சபாநாயகரை வரவேற்று கோஷமிடுகிறார்கள். அதனால், நாங்கள் ‘பெரியார் வாழ்க’ என கோஷமிடுகிறோம்.
நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி தொகுதிகளைக் கைப்பற்றினாலும், தமிழகத்தில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. அதற்கு பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர்தான் காரணம். ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்று நம் அடையாளத்தைத் தவிர்க்க இந்துத்துவத்தின் பெயரால் மிகப்பெரிய சூழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆரியத்துக்கும் திராவிடத்துக்குமான போர் இன்னமும் தொடர்கிறது. திராவிடத்துக்கு எப்போதும் ஆதரவு குரல் கொடுப்போம். அனைவருக்கும் கல்வியும் அறிவும் பெற்று தந்த இயக்கமாக திமுக உள்ளது.
1932-ம் ஆண்டுக்கு முன்புவரை மருத்துவம் படிக்க வேண்டுமென்றால், சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும். அதை மாற்றியமைத்தது திராவிடம்தான். தற்போது சமஸ்கிருதம் போல் நீட் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றியமைக்க இந்திய துணைக்கண்டத்திலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும். மத்திய அரசு தங்கள் கொள்கையை மாநில அரசிடம் திணிக்க முயற்சிக்கிறது. அதை திமுகவால்தான் தடுக்க முடியும்” என்று ஆ.ராசா பேசினார்.
பின்னர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் எதைச் சொன்னாலும், அதை வரவேற்று நல்ல திட்டம் என பேசும் அடிமை அரசாக முதல்வர் பழனிசாமி செயல்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதால் திமுகவுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு கிடையாது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் விரட்டியடிப்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.” என்று தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். யார் இந்த...
கஜகஸ்தானில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது....
நீட் தேர்வில் முறைகேடு செய்து இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி...
மகாராஷ்டிராவில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் புனேவில்...
Discussion about this post