சென்னையில் பரபரப்பு… தங்கத்தை நாம் பார்க்க முடியாத இடத்தில் வைத்து கடத்தல்…!

0

  

துபாயில் இருந்து தனியார் விமானம் மூலம் சென்னை விமானநிலையத்திற்கு வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். சமீபகாலமாக துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட்டுவரும் சம்பவம் அதிகரித்துவருவதால் அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய நபரின் உடை, அவர் கொண்டுவந்த பை என எதிலும் சந்தேகப்படும்படி எந்த பொருளும் இல்லை. ஆனாலும் அதிகாரிகள் அவரை விடவில்லை. அவரது உடலுக்குள் ஏதேனும் மறைத்துவைத்து கொண்டு வரப்படுகிறதா என சோதனை செய்ய முடிவு செய்தனர்

இதனை அடுத்து அவரது உடலை சோதனை செய்தபோது அவரது மலக்குடலில் சுமார் ரூ.26.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் எடையிலான தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்தது கண்டறியப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here