அரசு பேருந்து மேற்கூரையை பேனரால் மூடி ஓடியது…!

0

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்தில் மழைநீர் தேங்காதவாறு பேனரால் மூடப்பட்டிருந்தது.

சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து ராயகிரி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

பஸ்சுக்குள் மழைநீர் புகாமல் இருக்க, பஸ்சின் மேற்கூரையில் சுப நிகழ்ச்சிகளை விளம்பரம் செய்யும் வகையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பஸ்சின் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட பேருந்தில் போக்குவரத்து கழகம் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here