கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் கைதான 11 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மெத்தனால் விநியோகம் தொடர்பாக கோவிந்தராஜ், விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜ், மாதேஷ், சிவக்குமார் உள்ளிட்ட 11 பேரை மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் இன்று மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
Discussion about this post