விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் மாவு கல்லால் ஆன ஆபரணம் கண்டெடுக்கப்பட்டது.
வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. முன்னதாக இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது பல அரிய கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில், மாவு கல்லால் செய்யப்பட்ட நெக்லஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 மில்லி கிராம் எடையுடன் பச்சை நிறத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post