கொலை முயற்சி வழக்கில் சாட்சியமளிக்க வராத விசாரணை அதிகாரி விழுப்புரம் மாவட்ட டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தரமணி கனகம் தெருவைச் சேர்ந்த செந்தில் என்ற தச்சர், தனது மளிகைக் கடை முன் நின்று பேசிக் கொண்டிருந்த வினோத்தை துரத்திச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த வினோத், 2021 அக்டோபர் 29 அன்று செந்திலை வழிமறித்து கத்தியால் வெட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பாக தரமணி போலீசார் வினோத் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் முன்பு சாட்சியம் அளிக்க விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மூன்று முறை சம்மன் அனுப்பியும் டிஎஸ்பி ராமலிங்கம் ஆஜராகவில்லை. இதன் காரணமாக விசாரணை அதிகாரி டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Discussion about this post