கன்யாகுமரி மாவட்டம் அருமணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
அருமனை சந்திப்பில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ஒருவர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.