கள் விற்பனைக்கான தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது… நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

0

வரும் 29ம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், டாஸ்மாக் கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்பனையாகிறது ஆனால் குறிப்பிட்ட வகை மதுபானங்கள் மட்டுமே கிடைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். களை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் மது விற்பனை செய்வது அரசின் கொள்கை முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கள் விற்பனைக்கான தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக ஜூலை 29ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here