தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க தமிழக அரசு முறையான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் கேட்டால் தண்ணீர் தராத கர்நாடக அரசு அணைகளை திறக்க முன்வந்துள்ளது இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்நிகழ்ச்சி நிரூபித்துள்ளது. .
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்காத கர்நாடக அரசு இயற்கை அன்னையிடம் மண்டியிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இன்று தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து காவிரி பிரச்சனையில் தீர்மானம் நிறைவேற்றி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் திமுகவால் எதையும் சாதிக்க முடியவில்லை என பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு உறக்கத்தில் இருந்து விழித்து அணைகள் கட்டி தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரை பாதுகாத்து டெல்டா பகுதி விவசாயிகள் மட்டுமின்றி தமிழக விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.