தமிழ்நாடு இந்தியாவின் அறிவுசார் மற்றும் ஆன்மிக தலைநகரமாகக் கருதப்படுகிறது…. ஆர்.என்.ரவி உரை

0

தமிழ்நாடு இந்தியாவின் அறிவுசார் மற்றும் ஆன்மிக தலைநகரமாகக் கருதப்படுகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:

1947-ல் ஏற்பட்ட பிரிவினை இன்று கூட முழுமையாக முடிவடையவில்லை. நிலப்பகிர்வு மற்றும் மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகிறார்கள். பல சிந்தாந்தங்கள் பிரிவினையை ஆதரிக்கின்றன, அதில் திராவிட சிந்தாந்தம் ஒன்றாகும்.

திராவிட சித்தாந்தம் நாட்டை பிரிக்க விரும்புகிறது மற்றும் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகக் கருதவில்லை. நமது மீனவர்கள் கொல்லப்படுவதும், அவர்களின் படகுகள் மூழ்கடிக்கப்படுவதும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கப்பட்டது காரணமாகும்.

முன்பு இந்தியா தலைமையிலான அரசு, நமது நிலங்களை அண்டை நாடுகளுக்கு தாரைவார்த்தையாக்கியது. 1960-ல் இந்தியா சீனாவிடம் இடத்தை தாரைவார்த்தியது. அதுபோல், கச்சத்தீவையும் தாரைவார்த்தினர், இதனால் நமது மீனவர்கள் அண்டை நாடுகளின் ராணுவத்தால் தாக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அறிவுசார் மற்றும் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது. ஆனால், பள்ளிகள், கோயில்கள் மற்றும் கிராமத் திருவிழாக்களில் தலித்துகளுக்கு எதிரான சமூக பாகுபாடுகள் பற்றிய செய்திகள் மிகவும் வேதனைக்குரியவை மற்றும் வெட்கக்கேடானவை. இவ்வாறு சமூக பாகுபாடுகள் வெறுக்கத்தக்கவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here