உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய தாக்குதல்களில் 36 பேர் பலி…

0

குழந்தைகள் மருத்துவமனை உள்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய தாக்குதல்களில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே இன்று 865 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.

இந்தப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. நேற்று காலை, உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தலைநகர் கியேவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையும் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், 171 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here