அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
கன்சாஸிலிருந்து 67 பயணிகளுடன் அமெரிக்காவின் வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த விமானம். ஆற்றின் மீது தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த விமானம், எதிரே வந்த ராணுவ ஹெலிகாப்டரில் மோதியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்புப் படையினரும் தீயணைப்பு வீரர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானத்தில் இருந்த அனைவரும் விபத்தில் இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை 25க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.