அமெரிக்காவில் கோல்டு கார்டு என்ற புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கோல்டு கார்டு என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்காக, 41 கோடியே 50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்துவதன் மூலம், ஒருவர் கோல்டு கார்டைப் பெறலாம் என்றும், இதன் மூலம், அமெரிக்க குடியுரிமை பெறுவது எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் செயல்படுத்தப்படும் என்றும்,
இதுவரை நடைமுறையில் இருந்த EB-5 முதலீட்டாளர் விசாவில் பல மோசடிகள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, அந்த விசாவை ரத்து செய்து, கோல்டு கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும், முதல் கட்டத்தில் 1 மில்லியன் கோல்டு கார்டுகள் விற்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கோல்டு கார்டு விசா மூலம் பெறப்படும் பணம் அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.