WhatsApp Channel
போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை – இஸ்ரேல்
எகிப்து காசா பகுதியின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்துக்கு செல்ல ஒரே வழி ரபா நகரின் எல்லைக் கடவு வழியாகத்தான். இதற்கிடையில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் சண்டைக்கு மத்தியில் காஸாவுடனான தனது எல்லையை எகிப்து மூடியுள்ளது.
இதற்கிடையில் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தப் போவதாக தகவல் வெளியானது. மேலும், வெளிநாட்டினர் காசாவை விட்டு வெளியேறவும், மனிதாபிமான உதவிக்கு ஈடாக காசாவிற்குள் கொண்டு செல்லவும் ரபா எல்லையை திறக்க எகிப்துக்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹமாஸுக்கு எதிரான போரில் போர் நிறுத்தம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டவர்களுக்கு ஈடாக மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றும் இஸ்ரேல் கூறியது.
எகிப்து காஸா எல்லையை திறக்க இஸ்ரேல் அனுமதியளித்துள்ளதாக தகவல்…!
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இன்று 10வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. எகிப்து காசா பகுதியின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்துக்கு செல்ல ஒரே வழி ரபா நகரின் எல்லைக் கடவு வழியாகத்தான். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து காஸாவுடனான தனது எல்லையை எகிப்து மூடியுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் காசாவை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், போர் தொடங்கி ஓரிரு நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல் ரபா எல்லைக்கு அருகில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனால் காஸாவுக்கு உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
காசா பகுதியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களும் அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், காஸாவின் ரபா நகர எல்லையை இன்று திறக்க எகிப்துக்கு இஸ்ரேல் தற்காலிக அனுமதி அளித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இந்த எல்லை வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களை எகிப்து எல்லை வழியாக காஸாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எல்லை குறுகிய காலத்திற்கு மட்டுமே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து எல்லை திறக்கப்படும் போது தெற்கு காஸா மீது இஸ்ரேல் எந்த தாக்குதலையும் நடத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரபா நகர எல்லையை இன்று காலை 10:00 மணி முதல் (தற்போது இஸ்ரேல் நேரப்படி 9:45) திறக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post