WhatsApp Channel
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வடகொரியாவும் 2020ல் எல்லையை மூடியது.இதனால், சுற்றுலா துறைக்கு கிடைத்த வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வடகொரியாவும் முடிவு செய்துள்ளது. அதன்படி, அதன் நட்பு நாடான ரஷ்யாவுக்கு முதல்முறையாக அனுமதி வழங்கப்படுவதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்டை நாடான சீனாவுக்கு முதலில் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ரஷ்யாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post