WhatsApp Channel
மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகையும், 15ம் தேதி பொங்கல் திருநாளும், 16ம் தேதி மாட்டு பொங்கலும், 17ம் தேதி உழவர் திருநாளும் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பெரு நகரங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ஆம் தேதி 2ஆம் தேதி சனிக்கிழமை, ஜனவரி 14ஆம் தேதி பொது விடுமுறை, 15ஆம் தேதி திங்கள்கிழமை பொங்கல், ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17ஆம் தேதி கண்ணும் பொங்கல்.
ஆன்லைன், வாட்ஸ்அப் மற்றும் மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், உங்கள் பணத் தேவைகளை முறையாகத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post