WhatsApp Channel
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜெய்ஷ் அல் அடில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் உலகின் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அண்டை நாடுகளுக்குள் ஊடுருவி பல அசம்பாவித சம்பவங்களை செய்து வருகின்றன.
அந்த வகையில் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல்-ஆதில் என்ற பயங்கரவாத அமைப்பு ஈரானுக்கு பல மிரட்டல்களை கொடுத்து வந்தது. அவ்வப்போது ஈரான் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல்களையும் நடத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல்-ஆதில் என்ற தீவிரவாத அமைப்பின் இலக்குகளை குறிவைத்து கடந்த மாதம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
பதிலுக்கு ஈரானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைதி திரும்பியது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்குள் மீண்டும் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் ஷபக்ஷ் மற்றும் சிலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Discussion about this post