WhatsApp Channel
ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு உட்பட உக்ரைனுக்கு 6 பில்லியன் டாலர் ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்தப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் போர் நீடித்து வருகிறது.
இதேவேளை, உக்ரைனுக்கு 6 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் பெட்ரிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பும், ஏவுகணை உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களும் உள்ளடங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Discussion about this post