உக்ரைன் ராணுவம், கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில்பாதையை வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் முக்கியமான ஐந்து விமானப்படைத் தளங்களை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களால் நோக்கி தாக்கியதாகவும் கூறியுள்ளது. ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ என்ற ரகசிய நடவடிக்கையின் கீழ் நடைபெற்ற இந்த தாக்குதலில், அணுகுண்டுகளை ஏற்றி செல்லும் திறன் கொண்ட 41 அதிநவீன போர் விமானங்கள் தீப்பற்றிக் கருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு முகமை (உக்ரைன் ராணுவம்) வெளியிட்ட அறிக்கையில், “கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதைகளை கொண்ட மேம்பாலத்தை நாங்கள் அழித்துவிட்டோம். இதில் 1,100 கிலோ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. தாக்குதலால், கடலின் கீழுள்ள பாலத்தின் தூண்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய ரஷ்ய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிரைமியா செல்லும் பாலத்தில், வெறும் 3 மணி நேரம் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் வழக்கமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது” என்று தெரிவித்தார்.
2014-ஆம் ஆண்டு, ரஷ்யா உக்ரைனின் கிரைமியா பகுதியை கைப்பற்றியது. இந்த தீவுப் பகுதியையும், ரஷ்யாவையும் நேரடியாக இணைக்கும் 19 கிலோமீட்டர் நீளமான ஒரே ஒரு பாலமே உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பெருமையுடன் அறிவித்த திட்டங்களில் இதுவும் ஒன்று. சாலை மற்றும் ரயில்பாதைகள் தனித்தனியாக அமைந்துள்ள இந்த பாலம், கான்கிரீட் தூண்களின் ஆதாரத்தில் திகழ்கிறது. 2022-ஆம் ஆண்டில், ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்குள் முதன்முதலாக நுழைந்த போது இந்த பாலம் முக்கியப் பாதையாக பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.