ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா – சீனா இடையே உடன்பாடு

0

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடந்த வர்த்தகக் கலந்துரையாடலுக்கு பிறகு, ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை சலுகை செய்ய அமெரிக்கா மற்றும் சீனா ஒப்புக் கொண்டுள்ளன.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் மீது வரிவிதிப்பு மேற்கொண்டார். இதில் சீனாவிற்கு 34% வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீது வரிவிதித்தது. இந்த வரி போர் தீவிரமடைந்து, அமெரிக்கா 145% மற்றும் சீனா 125% வரிகளை உயர்த்தியது. இதனால், உலக சந்தைகளில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் 90 நாட்களுக்கு வரிவிதிப்பை இடைநிறுத்த ஒப்புதல் வழங்கின. அதன் தொடர்ச்சியாக, இருநாட்டு தலைவர்களும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். கடந்த வியாழக்கிழமை, ட்ரம்ப் மற்றும் சீன பிரதமர் ஜீ ஜின்பிங் தொலைபேசியில் விவாதித்தனர்.

அந்த உரையாடல் பற்றி ட்ரம்ப், “எங்களுக்கிடையிலான பேசுகை மிகவும் நேர்மறையாக இருந்தது” என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் லண்டனில் நேரில் சந்தித்து விவாதிக்கவுள்ளனர் என கூறினார். அதன்படி, ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை முடிந்ததும், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது: “முந்தைய ஜெனீவா ஒப்பந்தம், உயர்ந்த வரிவிதிப்புகளை குறைக்கும் வாய்ப்பை வழங்கியது. ஆனால் சீனா, முக்கியமான கனிமங்கள் மீதான ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை தொடர்ந்ததால், அந்த ஒப்பந்தம் பலனளிக்கவில்லை. இதனால், ட்ரம்ப் நிர்வாகம் சில முக்கிய பொருட்களின் சீனா ஏற்றுமதியைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தது.”

தற்போது லண்டனில் எட்டியுள்ள புதிய ஒப்பந்தம், சில முக்கிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்கும். இருநாட்டு தலைவர்களிடையே நேரடி பேச்சுவார்த்தையை அமல்படுத்தும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது ட்ரம்ப் மற்றும் ஜின்பிங் இருவரின் ஒப்புதலை பெறும் பின்னர், செயல்படுத்தப்படும்” என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here