”ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

0

தெஹ்ரானில் நடைபெற்ற தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவத் தலைவரும், உச்ச தலைவர் அலி கமேனிக்கு நெருக்கமான நபருமான அலி ஷத்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

புதியதாக பதவியேற்ற ஈரானிய உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானி உயிரிழந்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இக்காரணமாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தியில், “ஈரானின் போர்க்கால தளபதியான அலி ஷத்மானி, தெஹ்ரானின் மைய பகுதியில் நடந்த ஐஏஎஃப் தாக்குதலில், துல்லியமான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் கொல்லப்பட்டார்,” என ஐடிஎஃப் ட்வீட் செய்துள்ளது.

அலி ஷத்மானி, ஈரானின் ஆயுதப்படைகளில் அவசரநிலை கட்டளைத் தளபதியாக இருந்தவர். இவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானின் சுதந்திர ராணுவத்திற்கும் ஒரே நேரத்தில் தலைமை வகித்தார்.

இஸ்ரேலும் ஈரானும் இடையே நிலவும் பதற்றம் இன்று ஐந்தாவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், ஈரானிலிருந்து புதிய ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும், அவை கண்டறியப்பட்டுள்ளதென இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நடைபெறும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக இருநாடுகளிலும் பல உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. ஈரானில் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில், ஈரானின் பதிலடி தாக்குதல்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 592 பேர் காயமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here