ட்ரம்ப் ஒரு அழைப்பில் போர் நிறுத்த முடியும்: ஈரான்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விரும்பினால், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் முடிவுக்கு கொண்டு வர இயலும் என ஈரான் தெரிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி சேனலிடம் பேசிய ஈரான் அதிபரின் ஆலோசகர் மஜித் ஃபராஹானி, “ட்ரம்ப் இஸ்ரேலை கட்டுப்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும். ஆனால் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தாத வரை எந்தவிதமான உரையாடலும் சாத்தியமில்லை” என்று கூறினார்.
ஜெனீவாவில் ஐரோப்பிய நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களுடன் சந்தித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “இஸ்ரேல் தன் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்த முடியாது” என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “இப்போது இஸ்ரேலை நிறுத்தச் சொல்வது கடினம். இஸ்ரேல் வெற்றியடைந்து வருகிறது. ஈரான் அத்தனை சுறுசுறுப்பாக இல்லை. இருப்பினும், போர் நிறுத்தம் ஏற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஈரானுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.