“எனக்குப் பிடிக்கவில்லை!” – ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக ட்ரம்ப் சாடல்

0

போர் நிறுத்த உடன்படிக்கை ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு, இஸ்ரேலும் ஈரானும் அதை மீறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களுடன் பேசிய ட்ரம்ப், “ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது. அதன் விமானிகள் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஈரான் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசினால் அது பெரிய மீறல். எனவே, இஸ்ரேல் அதிலிருந்து விலக வேண்டும். உண்மையில், இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக எனக்கு தெரிகிறது. நேற்று நான் பார்த்த பல விஷயங்கள் எனக்கு பிடிக்கவில்லை, குறிப்பாக நாம் ஒப்பந்தம் செய்த உடனேயே இஸ்ரேல் குண்டுகளை வீசியது எனக்கு விருப்பமில்லை. அவர்களே அது செய்யக்கூடாது.

இஸ்ரேலின் பதிலடி மிகவும் கடுமையாக இருந்தது. அவர்கள் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக எனக்கு தோன்றுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்கள் பல ஆண்டுகளாகவும் கடுமையாகவும் நடைபெற்று வருகிறது. ஒரு நாடு மற்றொரு நாட்டின் செயல்களை அறியாது செயல்படும் நிலை உள்ளது. இது உங்களுக்கு புரிகிறதா?” என்று கூறினார்.

போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும், இஸ்ரேல் ஈரானை தாக்காது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த சில நிமிடங்களில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வெடிப்புகள் கேட்டன. ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதற்கு பதிலாக, இஸ்ரேல் ஒரு ரேடார் தளத்தை தாக்கியதாக தெரிவித்தது.

இஸ்ரேல், ஈரான் தாக்குதலுக்கு பதிலாக தனது பாதுகாப்பு படைகளுக்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டதாக ராணுவத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். ஆனால், ஈரான் இதனை மறுத்து, போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவப்படவில்லை என்று கூறியது.

அமெரிக்கா, ஈரான் தங்களின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை தாக்கியதைத் தொடர்ந்து பதிலடி அளிக்க, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசியது. இதனால் மத்திய கிழக்கில் அதிக பதற்றம் ஏற்பட்டது. கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் போன்ற நாடுகள் தங்களின் வான்வழி பரப்பை மூடியதாகத் தெரிவித்தன.

இது தொடர்ந்து, இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவுக்கு வந்ததை, போர் நிறுத்தத்துக்கான இரு நாடுகளின் ஒப்புதல் தகவலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு நாடுகளும் பரஸ்பர மோதல் தொடர்வதும், குற்றச்சாட்டுகள் பரிமாறும் நிலை அமெரிக்க அதிபரை மிகவும் அசௌகரியப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here