துருக்கியில் மறுமணம் செய்த ஹமாஸ் முன்னாள் தலைவர் சின்வரின் மனைவி – காசாவிலிருந்து தப்பிய நிகழ்வு!

துருக்கியில் மறுமணம் செய்த ஹமாஸ் முன்னாள் தலைவர் சின்வரின் மனைவி – காசாவிலிருந்து தப்பிய நிகழ்வு!

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் செயல்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்தவர் யாஹ்யா சின்வர். இவர் 2011-ம் ஆண்டில் சமர் முகமது அபு ஜாமா என்பவரை திருமணம் செய்தார். கடந்த ஆண்டில், அக்டோபர் மாதம் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வர் உயிரிழந்தார்.

சின்வரின் மனைவி சமர், தனது குழந்தைகளுடன், மற்றொரு பெண்ணின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ரபா எல்லை வழியாக எகிப்துக்கு சோம்பலாக தப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் துருக்கிக்கு சென்ற அவர், அங்கு வசித்து வந்த ஒரு துருக்கி நாட்டவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முயற்சிக்காக விமான பயணம், பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு எனும் வகையில் மிகுந்த செலவுகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

சின்வரின் மரணத்துக்குப் பின், அவரது சகோதரர் முகமது சின்வர் ஹமாஸ் இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால் பின்னர் அவரும் இஸ்ரேலின் தாக்குதலில் பலியாகினார். இந்நிலையில், முகமது சின்வரின் மனைவி நஜ்வா என்பவதும் ரபா எல்லை வழியாக காசாவை விட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெளிவாக இல்லை.

சமர் மற்றும் நஜ்வா ஆகிய இருவரும் தங்களுடைய கணவர்களின் இறப்புக்கு முன்பே காசாவிலிருந்து வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள் 21 மாதங்களாக நீடிக்கின்றன. இதுவரை 59,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box